Sunday, 2 February 2014

மெய்யுணர்தல்

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.


 பதப்பொருள் : உடையாய் - என்னை ஆளாக உடையவனே, உன் - உனது, விரை ஆர் - மணம் நிறைந்த, கழற்கு - திருவடிகளைக் குறித்து, என் - என்னுடைய, மெய் அரும்பி - உடல் புளகித்து, விதிர்விதிர்த்து - நடுநடுங்கி, கை தலைவைத்து - கைகளைச் சிரமேல் வைத்து, கண் நீர் ததும்பி - கண்களில் நீர் நிரம்பி, உள்ளம் வெதும்பி - மனம் வாடி, பொய் தவிர்ந்து - பொய்யொழுக்கத்தினின்றும் நீங்கி, உன்னை - உன்னை, போற்றி - வணக்கம், சயசய போற்றி - வெற்றி வெற்றி வணக்கம், என்னும் - என்று துதிக்கின்ற, கை - ஒழுக்கத்தை, நெகிழவிடேன் - அடியேன் நழுவவிடேன், (ஆகையால்) என்னை - எனது நிலைமையை, கண்டு - நோக்கி, கொள் - என்னை ஏற்றுக் கோடல் வேண்டும்.

1 comment:

  1. ip cctv systemsa Systems ... Internet Protocol (IP) camera systems are the new industry standard in business-class surveillance. They're considered ...

    ReplyDelete