Saturday, 11 January 2014

பழமொழி நானூறு

ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு

(சொ-ள்.) ஒக்கும் வகையான் உடன் பொரும் சூதின் கண் - ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து, பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் -பக்கத்திலே
இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்; (அதுபோல), மிக்க சிறப்பினராயினும் - மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரேயாயினும், தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு - தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வி யறிவான் மிக்காரிடத்து அன்பு தனிச் சிறப்புடையதாக இருக்கும்.

No comments:

Post a Comment