Thursday, 9 January 2014

தேடிச் சோறு நிதந் தின்று

தேடிச் சோறு நிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்


வாடப் பலசெயல்கள் செய்து - நரை


கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்


கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல


வேடிக்கை மனிதரைப் போலே - நான்


வீழ்வேனென்று நினைத்தாயோ ?!


-பாரதி

No comments:

Post a Comment